காதலர் தின சிறப்புக் கட்டுரை
ஒரு காதல்! ஒரு பாடல்! ஒரு காரணம்! ஒரு வாழ்க்கை! பொதுவாக காதலைச் சொல்ல வார்த்தைகள் போதாது! அகராதியில் இருந்து எல்லாம் தேடித்தான் வார்த்தைகளை கோர்த்துக் கொண்டு சென்று காதலை வெளிப்படுத்த முயற்சிகள் செய்வோம். ஆனால் சில நேரங்களில் ஒரே ஒரு பாடல் நம் எண்ணங்களை எல்லாம் ஒன்று கூட்டி அழகாக காதலை வெளிப்படுத்த உதவவும் செய்யக்கூடும். சரி இதை சங்க இலக்கியங்களில் இருந்து மெல்ல ஆரம்பிப்போம். சங்க இலக்கியத்தில் காதலைச் சொல்ல தலைவன் முயற்சி செய்கிறான். தலைவன் காதலிப்பது தலைவிக்கும் கூடத் தெரியும். ஆனால் அவள் காத்திருக்கிறாள். தலைவனே தன்னிடம் வந்து தன் அளப்பரிய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விருப்பமும் கொள்கிறாள்.காலம் கடக்கிறது. ஆனால் தலைவன் காதலை வெளிப்படுத்தாமல் தவிர்த்தே வருகிறான். ஒரு கட்டத்தில் தலைவி தலைவனிடம் சென்று யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே அதாவது… உன் தாயும் என் தாயும் உறவினர்கள் இல்லையே...உன் தந்தையும் என் தந்தையும் உறவினர்கள் கிடையாதே. நாம் காதலிப்பதற்கு முன்…. ம...
Comments