விரைவில்.... விதைகள் பதிப்பகத்தின் மற்றுமொரு மாறுபட்ட படைப்பே இந்த நாவல். காதல் இல்லாத ஜீவராசிகள் இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்படவே இல்லை. எல்லா உயிர்களும் காதலில் மகிழாமல் வாழ்வை கடக்க முடியாது. சிலருக்கு காதல் கைகூடி நீண்ட நிம்மதியான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக அமைகிறது. பலருக்கும் காதல் என்பது தொடக்கத்தில் இன்பமாகவும், மறுபாதியில் துன்பமாகவும் மாறி, அனுதினமும் நரகத்தை பரிசாக தரும் நிலையும் நடைமுறை வாழ்வில் இருக்கிறது. ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ எழுத்தாளர் பாரதிப்பிரியனின் எண்ணத்தில் உதித்த ஒரு மெல்லிய காதல் கதை. ஒரு எழுத்தாளராக, குரல் கலைஞராக அவர் எதை நேசித்து செய்தாரோ? அதையே கதைக்களமாக உருவாக்கி இருக்கிறார் என்றே கூறலாம். ஒரு எழுத்தாளர் தன் முப்பது வருட காதல் வாழ்க்கை-யை நேரலையில் தன் நேயர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் சொல்லி முடிப்பதே இந்த நாவலின் ஒரு வரி கதை என்றாலும் அதை நேர்த்தியாக வாசகர்கள் விரும்பும் வண்ணம் காட்சிகளாக விரித்து அவர்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படியாக, அபாரமான எழுத்து நடையை ஆசிரியர் கையாண்டு இருக்கிறார். நாவலின் ஒரு வரியைக் கூட நீ...